search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் வசதி"

    • தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • தமிழக முதல்-அமைச்சருக்கு கிராம நன்றி தெரிவித்தனர்.
    • பூஜை செய்து இனிப்பு வழங்கி முதல் பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சக்கில் நத்தம் மலை கிராமத்தில் 120 குடும்ங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இம்மலை கிராமத்திற்க்கு இது நாள் வரை பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரவும், மருத்துவமனைக்கு செல்லவும், வேலைக்கு சென்று வரவும் வாகனவசதி இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

    எனவே இக்கிரா மத்திற்க்கு அரசு பஸ் வேண்டி நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் கடந்த வாரம் இது குறித்து தமிழக முதல் அமைச்சரின் தனிபிரிவிற்க்கு மனு அளித்திருந்தனர். இதையறிந்த தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இக்கிராமத்திற்க்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து இன்று 16-ம் எண் அரசு நகர பஸ் பாலக்கோட்டில் இருந்து கோட்டூர், கரகூர் வழியாக ஈச்சம்பள்ளம் சக்கில் நத்தம் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டு போக்கு வரத்து துவக்கப்பட்டது. முதன்முதலாக கிராமத்திற்கு வந்த பஸ்சை ஊர் பொது மக்கள் அலங்கரித்து பூஜை செய்து இனிப்பு வழங்கி முதல் பயணத்தை தொடங்கி வைத்தனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் வழங்கிய தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பேவுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், ஊர்கவுண்டர்கள் முருகேசன், கோவிந்தராஜ், மந்திரி கவுண்டர்கள் மாதையன், ஜெய்சங்கர், மற்றும் ராஜா, நெடுமாறன் முன்ராஜ், கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
    • ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    வெள்ளகோவில்: 

    வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். வெள்ளகோவிலில் 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன, விசைத்தறிக்கூடங்கள், ஆயில் மில்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. வெள்ளகோவிலில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். வெள்ளகோவில் வழியாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. விசேஷ தினங்களில் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இருப்பதில்லை.

    இதனால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு வரும் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டும், படியில் தொங்கியவாறும் பயணிக்கின்றனர். அதைத் தொடர்ந்து வரும் பேருந்துகள் ஒரே நேரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக போதிய பயணிகள் இல்லாமல் ஒரே வழித்தடத்திற்கு செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பாளரை நியமனம் செய்து பயணிகளின் தேவைக்கேற்ப பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாறு பயணிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து கழகத்திற்கு என்று தனியாக ஒரு அறையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் வசதி இல்லாததால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
    • நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இயக்கி வந்த பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

    அதன்பின் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவிற்கு அதிக தொகை கொடுத்து சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இப்பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டிக்கு அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர்.
    • பாதுகாப்பாக சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலூர்

    மேலூர் அருகே நத்தம் ரோட்டில் உள்ளது சேக்கிபட்டி. இங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    சேக்கிபட்டி, பட்டூர், ஆலம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி உள்பட சுற்றி யுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லவும், பின்னர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பவும், அந்த நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை.

    இதனால் அவ்வழியே வரும் வெளியூர் பஸ்களில் ஏறி படிக்கட்டு களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வரு கின்றனர்.

    தனியார் பஸ்களும் லாபம் கருதி மாணவ, மாணவிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்கின்றனர். மேலும் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் வந்து நிற்கும் போது மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முண்டியடித்து ஏறு கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் இது குறித்து நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மாணவ, மாணவிகளுக்கு மாலை பள்ளி முடிந்து திரும்புவதற்கு பேருந்து வசதி வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது.
    • பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30-ஏ நகரப்பேருந்து மாலை 4.10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம் அறிவொளிநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை பள்ளி முடிந்து திரும்புவதற்கு பேருந்து வசதி வேண்டி 4.7.2023 அன்று நாளிதழில் செய்தி வெளியானது.

    இதையடுத்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30-ஏ நகரப்பேருந்து மாலை 4.10 மணி கால அட்டவணையின் படி பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உத்தரகோசமங்கை கோவிலுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
    • பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

    குறிப்பாக விஷேச நாட்களிலும், ஆருத்திரா தரிசனத்தன்றும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இந்த கோவிலுக்கு சென்று வர தற்போது வரை போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பக்தர்கள் கூடுதல் விலை கொடுத்து ஆட்டோ, கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சத்திரக்குடி, சாயல்குடி, கீழக்கரை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து உத்தரகோசமங்கைக்கு பஸ் வசதி இல்லை. இப்பகுதியை சேர்ந்த வர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் ராமநாத புரத்திற்கு வந்து பஸ் ஏற வேண்டும். இதனால் பொது மக்கள் கடும் சிரமமடைகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும் அவதியடை கின்றனர். எனவே பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இப்பள்ளி 10-ம், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பள்ளிக்கு எழுவன் கோட்டை, தெண்ணீர்வயல், உடப்பன்பட்டி, நாச்சியா புரம் கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பெரியகாரையில் இருந்து தேவகோட்டை நகர் பஸ் நிலையம் வரை பஸ் வழித்தடத்தில் செல்லும் நகர பஸ்சை முன்னாள் மாணவர் பூமிநாதன் முன்னிலையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடி யசைத்து தொடங்கி வைத்தார் மேலும் பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கவுரவித்து பள்ளி மாணவ- மாணவிகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் சிங்காரவேலன், டிவிஷனல் மேனேஜர் தங்கபாண்டியன், தேவகோட்டை கிளை மேலாளர் சொக்கலிங்கம், பச்சைமால், பொறியாளர் மோகன், பேருந்து நிலைய பொறுப்பாளர் சந்தியாகு, ஊராட்சி மன்ற தலைவர் திருமணவயல் ராமையா, கண்ணங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிலவிழிநாதன், அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், சாமிநாதன், இளங்குடி முத்துக்குமார் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முதடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து நன்றி கூறினார்.

    • அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள்.
    • காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் பஞ்சாயத்துக்கு உடபட்ட காளிவேலம்பட்டி கிராமத்திலிருந்து செம்மிப்பாளையம் ஊராட்சி சாமிகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள். தினந்தோறும் இந்த பகுதிகளில் இருந்து நடந்தும் சைக்கிளிலும் சென்று வருகின்றனர்.

    இதனால் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. ஆகவே இந்த பகுதியில் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையில் காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • சோழவந்தான் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்குமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, குருவித்துறை, திருவேடகம், மேலக்கால், நெடுங்குளம், தச்சம்பத்து, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த படிப்பு களுக்காகவும் மதுரை நகர் பகுதிகளுக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று வருகின்றனர்.

    இவர்கள் கல்லூரி முடிந்து மாலை 5மணிக்கு மேல் வீடு திரும்புவதற்கு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து போதுமான பஸ்வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாலை 6 மணி முதல் 7.30மணி வரை சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதி களுக்கு எந்த ஒரு பஸ்சும் இல்லாததால் தினசரி சுமார் 2மணி நேரம் பெரியார் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும், ஆகை யால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிக ளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் இதில் தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

    • கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • பஸ் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செங்கோட்டை கிளை மேலாளாரிடம் செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலை பள்ளியின் சார்பில் கோரிக்கை மனுவினை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் அளித்து உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மேலச் செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பிரானுார், பார்டர், சிலுவைமுக்கு, கதிரவன் காலனி, மூன்றுவாய்க்கால், ரெட்டைக்குளம், காடுவெட்டி, மோட்டை, கண்ணுப்புள்ளிமெட்டு, விசுவநாதபுரம், பெரிய பிள்ளைவலசை, மாவடிக் கால்தோப்பு, தேன் பொத்தை, ராஜபுரம்காலனி, மீனாட்சிபுரம், பண்பொழி, வடகரை, வாவாநகரம், அச்சன்புதுார், இலத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனா்.

    மேலும் மேற்குதொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனா். இப்பள்ளியானது செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மேற்கே செல்லுகின்ற கேசி ரோடு சாலையில் சுமார் 1கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.

    இந்த சாலையில் மேலச்செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி, மூன்று வாய்க்கால், கண்ணுப்புள்ளி மெட்டு ஆகிய பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளி கள் அமைந்துள்ளது.

    இந்த கேசி ரோடு சாலை யில் சுற்றுலா முக்கி யத்துவம் வாய்ந்த குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள தனியார் எஸ்டேட்களுக்கு இங்கிருந்து கூலித் தொழிலாளா்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனா்.

    இந்த கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ்கள் இயக்கப்படவில்லை. மேற்கு தொடா்ச்சிமலை அடிவார பகுதியிலிருந்து வருகை தரும் மாணவ, மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

    எனவே கேசி.ரோடு சாலை வழியாக மேலச் செங்கோட்டை வழியாக காலை 8 மணிக்கு கண்ணுப் புள்ளிமெட்டுக்கு செல்லும் வகையிலும், 8.30மணிக்கு திரும்பி வரும் வகையிலும், அதேபோல் மாலை 4.15 மணிக்கு கண்ணுப்புள்ளி மெட்டுக்கு சென்று 4.45 மணிக்கு திரும்பி வரும் வகையிலும் பஸ் வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இதன்மூலம் மேற்கண்ட வாறு மாணாக்கர்களுக்கு வசதிகள் கிடைப்பதோடு கூடுதலாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தது.

    • வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • 2 பஸ்களையும் மாற்று பாதையில் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தமிழகமீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    செட்டியாபத்து ஊராட்சிக்குட்பட்ட வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மக்கள் பள்ளி, ஆஸ்பத்திரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்களில் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள்மிகுந்த சிரமப்படு கின்றனர்.

    மேலும் புகழ் பெற்ற கூழையன் குண்டு அல்லிஊத்து கல்லால் அய்யனார் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த பக்தர்கள் பஸ் வசதி இல்லாததால் உடன்குடி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து கோவிலுக்கு செல்கின்றனர்.

    பொது மக்கள், பக்தர்களின் நலன் கருதி உடன்குடி - பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் தைக்காவூரில் இருந்து வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் வழியாக உடன்குடி - செட்டியாபத்து மெயின் ரோட்டுக்கு வந்து உடன்குடி பஸ் நிலையம் செல்லும் வகையில் பஸ்களைஇயக்க வேண்டும்.

    குறிப்பாக உடன்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் தடம் எண் 61 டி திருச்செந்தூரில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும், உடன்குடியில் இருந்து காலை 9.30 மணி, மாலை 4.10 மணிக்கும் புறப்படுகிறது. இது போன்று அரசு பஸ் தடம் எண் 62 பி திருச்செந்தூரில் இருந்து மாலை 3.15 மணி, உடன்குடியில் இருந்து மாலை 4.30 மணிக்கும் புறப்படுகிறது.இந்த 2 அரசு பஸ்களை மேற்குறிப்பிட்டுள்ள 2 கிராமங்கள் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்படி பஸ்களை இயக்குவதால் சுமார் 15 ஆண்டு காலமாக எந்த வித பஸ்வசதியும் இல்லாத இரு கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்கும்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக 2 பஸ்களையும் மாற்று பாதையில்இயக்கி 15 வருடமாக பஸ் வசதி இல்லாத ஊருக்கு பஸ் வசதி கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×